பள்ளிக்கூட மாணவர்களுக்கான இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சி
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஆதிசக்தி பவுண்டேஷன் சார்பாக சௌபாக்கியா மஹாலில் பள்ளி மாணவர்களுக்கான இளைஞர்கள் பாராளுமன்றம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 15 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய தலைமைத்துவ பண்புகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கம் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஆதிசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சௌமியா தினேஷ், ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி செயலாளர் பழனிகுமார் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக விநாயகா ரமேஷ், ரீஜென்ட் கார்மெண்ட்ஸ் குழுமத்தின் உரிமையாளர் ராகுல் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சாஹித்திய அகாடமி விருது பெற்ற உதயசங்கர் ‘மாயகாடு’ மற்றும் ‘காக்கா கொண்டு போச்சு’ ஆகிய சிறார் நூல்களை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் நோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் சிறப்பாக விவாதித்த மாணவர்களுக்கு சிறந்த அமைச்சர், சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சிறந்த பள்ளிக்கான விருதை,சிறப்பு விருந்தினர் முன்னாள் அமைச்சர்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு வழங்கி கௌரவித்தார்.







