சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் மக்கள் நலத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 முதல் ஒரு வாரத்திற்குத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, “லஞ்சம் […]
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: – “எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி தருவதாகக் கூறினர். மேலும், திமுகவுக்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும் பேரம் பேசினர். திமுக முக்கிய நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்கள் […]
கோவில்பட்டி நகரில் பைக் டாக்ஸிகளை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி வட்டார ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ ஊர்வலம் நடந்தது. கோவில்பட்டியில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்ஸிக்கு அனுமதி தரக்கூடாது. பைக் டாக்ஸிக்கு சீருடை, எப்.சி., உரிமம், அரசாங்க முத்திரைகள் எதுவும் இல்லாததால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரிபாகம் விலையேற்றம், காப்பீடு, எப்.சி., உரிமம் ஆகியவற்றின் கட்டண உயர்வால் ஆட்டோ தொழில் தத்தளித்து வரும் நிலையில், […]
கோயம்புத்தூர் Dr. NGP தொழில்நுட்பக் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி code zap 36 hours என்ற தலைப்பில் 36 மணி நேரம் இடை விடாது நடைபெற்றது. இப்போட்டியில் கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். கணிப்பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவர் மகாராஜா முதல் பரிசாக ரூபாய் 10000 மற்றும் சிங்கப்பூரில் நடைபெறும் தொழில்நுட்ப கருத்தரங்கிற்கு code zap கம்பெனி மூலம் இலவசமாக பயணம் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார். கணிப்பொறியியல் துறை இறுதி […]
79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆ க்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நடந்து வருகின்றன கடந்த 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன . […]
சொத்துத் தகராறில் அண்ணன் குடும்பத்தைத் தாக்கிய வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வரும் ஜூலை 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுத் தற்போது தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் மரிய வில்சன். இவருக்கும் இவருடைய தந்தை நெஸ்டோர் என்பவருக்கும், புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அண்ணன் மரிய கிளோத் […]
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் சிக்கினார் கள். தாளமுத்துநகர், தாய்நகரை சேர்ந்த சந்தோஷ் குமார் (19), தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மரிய அந்தோணி ஆகாஷ் (19) மற்றும் தாளமுத்துநகர், சிலுவைப் பட்டியை சேர்ந்த அந்தோணி ஜெகன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சோதனையின்போது அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் மீது […]
தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காதவர்கள் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், […]
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் ஆர்.வி. ஆர்லேகரைத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பின் போது பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக நிர்வாகி திருப்பதி நாராயணன் ஆகியோர் உடனிருந்தன தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நிலவி வரும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, குதிரை பேரம் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான புகார் […]
அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை அதிரடி பாத்திரங்களை ஏற்று நடிக்கிறார் யோகி பாபு 9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி பாபு நடிக்கிறார். இது வரை இல்லாத வகையில் 11 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் யோகி பாபு நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த […]







