• June 4, 2025

Month: May 2024

தூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடியில் வரவேற்பு

திருநெல்வேலியில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.  தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகைதந்த  எடப்பாடி பழனிசாமியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் புத்தகம் வழங்கி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ உள்பட பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் திருநெல்வேலி […]

செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி மினி பஸ் கவிழ்ந்தது; ஒகேனக்கல் சுற்றுலா வந்த 20

சென்னை அம்பத்தூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா புறப்பட்டு வந்தனர்.வாடகைக்கு எடுத்த மினி பஸ்சை  பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்பவர் ஓட்டினார். மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது டிரைவர் தூக்க கலக்கத்தில் தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது.இதனால் பஸ்சில் இருந்தவர்கள் டிரைவரை பஸ்சில் இருந்து இறக்கி டீ வாங்கி கொடுத்து சிறிது நேரம் தூங்க சொல்லி உள்ளனர். அதற்கு டிரைவர் நானே பஸ்சை ஒட்டுவதாக சொல்லி […]

செய்திகள்

ஜெயலலிதா பற்றி தமிழிசை சவுந்தரராஜன்  பேச்சுக்கு டி.ஜெயக்குமார் கண்டனம்  

சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அத்தனை பேருக்கும், மதநல்லிணக்கத்தோடு வாழக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர் ஜெயலலிதா.. ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறி இருக்கும்  கருத்து, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்து. அண்ணாமலை திமுகவின் பி-டீமாக செயல்படுகிறார். நாட்டில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் டெங்கு தடுப்பு  ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் டெங்கு தடுப்பு பணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணி முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜவகர் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி,மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி கலந்து கொண்டு டெங்கு தடுப்பு பணிகள் குறித்து பேசினார்.சுகாதார ஆய்வாளர்கள்,துப்புரவு […]

செய்திகள்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி நாளை முதல்  3 நாட்கள் தியானம்;பலத்த

பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) கன்னியாகுமரி வருகிறார் உத்தரபிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்கிறார். அங்கிருந்து தனி படகில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.  சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து வணங்குகிறார். அதனைத் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே கங்கன்குளம் கருங்காளியம்மன் கோவில் கொடை விழா

கோவில்பட்டி தோணுகால் ரோடு கங்கன்குளம் கருங்காளியம்மன், மாரியம்மன், சின்னகருப்பசாமி, வைரவசாமி, கிளிக்கூண்டு கருப்பசாமி கோவில் கொடை விழா நேற்று  நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஸ்ரீகணபதிக்கு அபிஷேகம், தீபாராதனை, மதியம் 12 மணிக்கு வடக்குத்தி அம்மன் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் கருப்பசாமி கோவிலில் இருந்து காளியம்மனுக்கு பால்குடம், தீர்த்தக்குடம், ஆயிரங்கண் பானை, தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நடந்தது. அதன்பிறகு காளியம்மனுக்கு அபிசேகம், கும்பம் ஏற்றுதல் பூஜைகளும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி […]

செய்திகள்

ஆஸ்பத்திரியில் இருந்து வீடியோ வெளியிட்ட வைகோ – “முழு நலத்தோடு மீண்டு வருவேன்”

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார். அன்று இரவு எதிர்பாராத விதமாக அவர் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்பட வைகோ, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் […]

கோவில்பட்டி

6-வது நாள் அகில இந்திய ஆக்கிபோட்டி: முதல் ஆட்டத்தில்  சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல்

கோவில்பட்டி செயற்கை  புல்வெளி மைதானத்தில் நடைபெற்று வரும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான போட்டியின் 6-ம் நாளான இன்று ( 29.05.2024) புதன்கிழமை காலை 7 மணியளவில் 21வது லீக் போட்டி நடைபெற்றது. சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய  6-வது நிமிடத்தில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ்  பீல்டு கோல் முறையில் […]

செய்திகள்

இலங்கையில் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற தமிழக வீரர்களை நேரில் அழைத்து

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் 10வது மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தாயகம் திரும்பிய  வீரர், வீராங்கனைகளை நடிகர்  ரஜினிகாந்த் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் அதன்படி 100,200 மீட்டர் ஓட்டத்தில் முறையே 2, 3 வது இடம், கலப்பு ரிலேவில் முதல் பரிசு பெற்ற எம்.செண்பகமூர்த்தி, 100,200 மீட்டர் ஓட்டத்தில் 3 வது இடம், கலப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆக்கி: 18,19,20 -வது லீக் போட்டி முடிவுகள் 

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 5 வது நாளான இன்று (28ந் தேதி )மாலை 5.15 மணியளவில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மும்பை, யூனியன் பேங்க் அணியும் மோதின. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் மும்பை, யூனியன் பேங்க் அணி வெற்றி பெற்றது. அஸ்வனி குமார்,சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருதை மும்பை, யூனியன் பேங்க் அணி வீரர் சாத்விக்.ஹெச்.ஆர். பெற்றார்.  […]