கோவில்பட்டி அருகே கங்கன்குளம் கருங்காளியம்மன் கோவில் கொடை விழா

கோவில்பட்டி தோணுகால் ரோடு கங்கன்குளம் கருங்காளியம்மன், மாரியம்மன், சின்னகருப்பசாமி, வைரவசாமி, கிளிக்கூண்டு கருப்பசாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஸ்ரீகணபதிக்கு அபிஷேகம், தீபாராதனை, மதியம் 12 மணிக்கு வடக்குத்தி அம்மன் பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் கருப்பசாமி கோவிலில் இருந்து காளியம்மனுக்கு பால்குடம், தீர்த்தக்குடம், ஆயிரங்கண் பானை, தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நடந்தது. அதன்பிறகு காளியம்மனுக்கு அபிசேகம், கும்பம் ஏற்றுதல் பூஜைகளும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அழகர்சாமி,இளைஞர் இளம்பெண்கள் பாசறைசெயலாளர் கவியரசன்,கலை இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி,எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றிய செயலாளர் அம்பிகைபாலன்,கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, முருகேசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
