இலங்கையில் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற தமிழக வீரர்களை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் 10வது மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்
அதன்படி 100,200 மீட்டர் ஓட்டத்தில் முறையே 2, 3 வது இடம், கலப்பு ரிலேவில் முதல் பரிசு பெற்ற எம்.செண்பகமூர்த்தி, 100,200 மீட்டர் ஓட்டத்தில் 3 வது இடம், கலப்பு ரிலேவில் முதல் பரிசு பெற்ற சுரேஷ் காசிநாதன்,
100,200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் 3 வது இடம், கலப்பு ரிலேவில் முதல் பரிசு பெற்ற ஜேசு எஸ்தர் ராணி, 100 மீட்டர் ஒட்டம், நீளம் தாண்டுதலில் இரண்டாவது இடம், கலப்பு ரிலேவில் முதல் பரிசு பெற்ற ஆர்.பிரமிளா ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
