எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடியில் வரவேற்பு

திருநெல்வேலியில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகைதந்த எடப்பாடி பழனிசாமியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் புத்தகம் வழங்கி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ உள்பட பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் திருநெல்வேலி புறப்பட்டு சென்றார்.
