சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விநியோகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் இன்று தொடங்குகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் […]
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடத்தபட்டு வருகின்றன, பஜனை குழுவினர் முக்கிய வீதிகள் வழியாக பஜனை பாடியபடி சென்று வருகிறார்கள். அதை தொடர்ந்து கட்டளைதாரர் சார்பில் பூஜைகள் தொடங்கி இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வாசலில் தினமும் பெண்கள் 3 பேர் பல்வேறு விதமான கோலங்களை போட்டு அசத்தி வருகிறார்கள். ஒவ்வொரு […]
கோவில்பட்டி – கடம்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்காக இந்த பகுதியில் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- முழுமையாக ரத்தாகும் ரெயில்கள் * ஜனவரி 9 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரெயில் (22622) மற்றும் ஜனவரி 10 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு […]
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 2-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை […]
கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் கடந்த 16.12.2022 அன்று மேல பாண்டவர்மங்கலம் பகுதியை சேர்ந்த பூல்சாமி (எ) கொம்பையா மகன் கருப்பசாமி (வயது 23) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த் கொலை தொடர்பாக அவரது அண்ணன் பாண்டித்துரை (29) என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் பாண்டித்துரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி […]
கரூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற உறுப்பினர் திருவிக வாக்களிக்க கூடாது என தி.மு.க. தரப்பில் மிரட்டப்பட்டதாகவும் மேலும் அவரையும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் சிவராஜ் ஆகிய இருவரையும் தி.மு.க.வினர் கடத்தி சென்றதாக அ.தி.மு.கவி.னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் காவல்துறையினர் கடத்திய தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்து மட்டுமே உள்ளதாகவும் கைது செய்யாமல் காலம் காட்டி […]
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன., தினமும் ஒவ்வொரு கட்டளைதாரர் சார்பில் பூஜைகள் நடக்கின்றன. மார்கழி மாத 23-ம்நாள் எஸ்.கே.டி.சவுந்தரபாண்டியன் நாடார்-ராஜம்மாள் குடும்பத்தினரின் கட்டளை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. . பஜனை குழுவினர் கோவிலில் இருந்து பஜனை பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்றபிறகு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். அதன்பிறகு கோவிலில் தீப ஆராதனை நிகழச்சி […]
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி […]
`பள்ளிக்கு திரும்புவோம்’: பெற்றோர்-மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி; காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரை
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (6.1.2023) வடபாகம் பீச்ரோடு பகுதியில் உள்ள கால்டுவேல் மேல்நிலைப்பள்ளியில் ‘பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற பெற்றோர் – மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:-‘ இந்த பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு திட்டம் என்பது சமுதாய மாற்றத்திற்கான ஒரு விதையாகும், தற்போதுள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மற்றும் […]
கோவில்பட்டி மெயின் ரோடு மார்க்கெட் ரோடு அருகில் ஓடையில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த பணிக்கு தேவையான சல்லி மணல் ஆகியவை நீண்ட நாட்களா மலை போல் சாலையில் குவிக்கப்பட்டுள்ளன இதனால் சாலையின் அகலம் சுருங்கி விட்டது. பற்றாக்குறைக்கு நீர்வரத்து ஓடை அருகே வேன், கார், ஆட்டோக்கள் நிறுத்தி வைத்து விடுகிறார்கள். மேலும் நடைபாதை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பும் இருக்கிறது, இதன் காரணமாக மெயின் ரோட்டில் மார்க்கெட் சாலை சந்திப்பு அருகே அடிக்கடி வாகன […]







