கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி , அவரது சகோதரர் தனி ஆட்சி- டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கரூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற உறுப்பினர் திருவிக வாக்களிக்க கூடாது என தி.மு.க. தரப்பில் மிரட்டப்பட்டதாகவும் மேலும் அவரையும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் சிவராஜ் ஆகிய இருவரையும் தி.மு.க.வினர் கடத்தி சென்றதாக அ.தி.மு.கவி.னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
காவல்துறையினர் கடத்திய தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்து மட்டுமே உள்ளதாகவும் கைது செய்யாமல் காலம் காட்டி வருவதாகவும் காயமடைந்த பாதிக்கப்பட்ட அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகளை போட்டு பிணையில் வராத வகையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்
இதுவரை அ.தி.மு.க.வை சேர்ந்த 72 பேர் மீது வழக்கு பதிவு செய்து பொய் வழக்கில் அவர்களை கைது செய்திருப்பதாக அ.தி.முக. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்
மேலும் தி.மு.க.வினர் அ.தி.மு.க. கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் சிவராஜ் தி.மு.க.வினர் தாக்கியும் அது குறித்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பாக அதிமுக
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது
கரூர் மாவட்டத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோர் தனி ஒரு ஆட்சியை நடத்தி வருவதாகவும் மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் இவர்களின் செயல்பாட்டுக்கு உடன் போவதாகவும் குற்றம் சாட்டினார்
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதன் பின்னர் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் எஎன்று குறிப்பிட்ட டி.ஜெயக்குமார், தற்போது செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
தற்போது டிஜிபி அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளை தாக்கிய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை கு எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கா விடில் நீதிமன்றம் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
தெரிவித்தார்
காலச்சக்கரம் சொல்லும் எனவும் அப்போது செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் தற்போது அதிமுகவினர் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதிலடி கொடுக்கப்படும்
.இவ்வாறு டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க.மாணவர் அணி சார்பில் நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , வளர்மதி பொன்னையன், கழக மாணவர் அணி.செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ் ஆர் விஜயகுமார், கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியதாவது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்க கூடிய கருத்து பண்பாடு இல்லாத மிருகத்தனமான செயல்.கே கே எஸ் ஆர் ராமச்சந்திரனை அடையாளம் காட்டியது அ.தி.மு.க. தான்
அ.தி.மு.க.வினர் , அண்ணாவின் வழி வந்தவர்கள் , தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் தமிழ்நாடு என்ற பெயரை அ.தி.மு.க.ஆதரிக்கிறோம்
கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கான பணிவாய்ப்பு மறுப்பு என்பது தி.மு.க .அரசின் தவறான செயல். தி.மு.க. அரசு விழா அரசாக மட்டுமே செயல்பட்டு வருகிறது இந்த விடியா அரசு விரைவில் வீழும்
விவசாயிகளிடம் 33 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் குறைவான விலையில் பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கரும்பு விவசாயிகள் மட்டுமின்றி முந்திரி ஏலக்காய் உள்ளிட்ட அனைத்து வகையான விவசாயிகளையும் விடியாஅரசு வஞ்சித்து வருகிறது.
எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக ஆட்சிக்கு முன் மற்றும் ஆட்சி அமைத்த பின் வேறுபட்ட பச்சோந்தித்தனமான கருத்துக்களை தி.மு.க. தெரிவித்து வருகிறது
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்
