• June 8, 2025

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை

 கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை

கோவில்பட்டி பத்திரகாளி  அம்மன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன., தினமும் ஒவ்வொரு கட்டளைதாரர் சார்பில் பூஜைகள் நடக்கின்றன.

மார்கழி மாத 23-ம்நாள் எஸ்.கே.டி.சவுந்தரபாண்டியன் நாடார்-ராஜம்மாள் குடும்பத்தினரின் கட்டளை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. .

பஜனை குழுவினர் கோவிலில் இருந்து பஜனை பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்றபிறகு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

அதன்பிறகு கோவிலில் தீப ஆராதனை நிகழச்சி தொடங்கியது. இதில் கட்டளைதாரர் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர். முதலில் விநாயகருக்கு தீப ஆராதனை  செய்யப்பட்டு பின்னர் கொடி மரத்துக்கு  தீப ஆராதனை நடந்தது,தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

இறுதியில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை கட்டளைதாரர்  சார்பில்  எஸ்.கே.டி.எஸ்.தமிழரசன் தொடங்கி வைத்தார்.

இன்றைய பூஜையில் கோவில் நிர்வாகி மாணிக்கம், தர்மகர்த்தா மாரியப்பன், நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபால், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், தி.மு.க. 11-வது வார்டு செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *