கோவில்பட்டியில் மாநில ஆக்கி : சென்னை, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை அணிகள், அரை இறுதி போட்டிக்கு தகுதி


கோவில்பட்டியில் மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது.
33 மாவட்ட அணிகள் பங்கேற்ற இந்த போட்டி, 3 மைதானங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற நான்காவது நாள் போட்டியில் காலை 6.30 மணி அளவில் முதலாவது கால் இறுதி ஆட்டம் நடந்தது.

சென்னை மாவட்ட அணி தூத்துக்குடி மாவட்ட அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இரண்டாவது கால் இறுதி ஆட்டம் 8.30 மணி அளவில் திருநெல்வேலி மாவட்ட அணி தஞ்சாவூர் மாவட்ட அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மூன்றாவது கால் இறுதி ஆட்டத்தில் விருதுநகர் மாவட்ட அணியும் தஞ்சாவூர் மாவட்ட அணியும் ஆடிய ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றதால் இறுதியில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது இதில் 4-2 என்று கோல் கணக்கில் விருதுநகர் மாவட்ட அணி வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதியாக நான்காவது கால் இறுதி ஆட்டத்தில் மதுரை மாவட்ட அணி நீலகிரி மாவட்ட அணியை 3-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது நாளை காலை 6.30 மணி அளவில் நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் சென்னை மாவட்ட அணியும் திருநெல்வேலி மாவட்ட அணியும் விளையாடுகிறது இரண்டாவது அரை இறுதி ஆட்டம் 8.30 மணி அளவில் விருதுநகர் மாவட்ட அணியும் மதுரை மாவட்ட அணியும் விளையாடுகிறது.

நாளை மாலை 2.30 மணி அளவில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியும் 4 மணி அளவில் இறுதி ஆட்டமும் நடைபெறும் நாளை (ஞாயிறு) நடக்கும் இறுதிப்போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே ஆர் அருணாச்சலம் மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன் பொதுச்செயலாளர் செந்தில் ராஜ்குமார், ஆக்கி யூனிட் ஆப் முன்னாள் தலைவர் செல்லதுரை அப்துல்லா, மதுரை மாவட்ட ஆக்கி சங்கர் தலைவர் ஏ ஜி கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்க உள்ளனர்
