பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுக்கு பிறகு 4பேர் கைது; திடுக்கிடும் தகவல்

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் வானரமுட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டி மகன் ஆட்டோ டிரைவர் சண்முகராஜ் (வயது 35). இவர் கடந்த 9.4.2023 இரவு ஜமீன் தேவர்குளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி வெள்ளத்துரைச்சி (28) என்பரை சவாரி ஏற்றிக் கொண்டு நாலாட்டின்புதூர் நாச்சியார்பட்டி to காளாம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவை வழிமறித்து சண்முகராஜை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் வெள்ளைத்துரைச்சி கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் கிடைக்காமலும் எதிரிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து எந்த துப்பும் 2 ஆண்டுளுக்கு மேலாக கிடைக்கவில்லை.

இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர்கள் கழுகாசலமூர்த்தி, ரமேஷ், கார்த்திக்ராஜா, விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சரவணகுமார், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சண்முகராஜ் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் விசாரணை செய்து கூறிய தகவல்கள் ஆகியவற்றை மீண்டும் ஆராயப்பட்டது.
இதனையடுத்து மேற்படி போலீசாரின் தீவிர விசாரணையில் புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் வானரம்படி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் கணேசன் (29), அவரது சகோதரர் ராஜா (32) மற்றும் அவரது உறவினர்களான கயத்தாறு வடக்கு கோனார்கோட்டையை சேர்ந்த வேல்பாண்டி மகன் சங்கிலிபாண்டி (28), கோவில்பட்டி இந்திராநகரைச் சேர்ந்த வெள்ளைசாமி மகன் சங்கிலிபாண்டி ஆகியோர் இந்த கொலையில் தொடர்பு கொண்ட விவரம் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆட்டோ ஓட்டுநரான சண்முகராஜ் என்பவருக்கும் கணேசன் என்பவருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவர் பதவி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதும், அந்த முன் விரோதத்தினால் மேற்படி 4 பேர் சேர்ந்து சம்பவ இடத்தில் வைத்து சண்முகராஜை கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டும் அவர் மயக்கமடைந்த நிலையில் அவருடன் சவாரியில் இருந்த வெள்ளைதுரைச்சி தடுக்க வந்தபோது அவரையும் கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்தனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
