• June 9, 2025

கோவில்பட்டியில் தம்பியை கொன்றவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

 கோவில்பட்டியில் தம்பியை கொன்றவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் கடந்த 16.12.2022 அன்று  மேல பாண்டவர்மங்கலம் பகுதியை சேர்ந்த பூல்சாமி (எ) கொம்பையா மகன் கருப்பசாமி (வயது 23) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த் கொலை தொடர்பாக அவரது அண்ணன் பாண்டித்துரை (29) என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர்  பாண்டித்துரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு  பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தம்பியை கொன்றதாக கைதான  பாண்டித்துரையை  குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாண்டித்துரையை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *