கோவில்பட்டி மெயின் ரோட்டில் ஜல்லி, மணல் குவியல் ; வாகன நெரிசலால் மக்கள் அவதி

கோவில்பட்டி மெயின் ரோடு மார்க்கெட் ரோடு அருகில் ஓடையில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த பணிக்கு தேவையான சல்லி மணல் ஆகியவை நீண்ட நாட்களா மலை போல் சாலையில் குவிக்கப்பட்டுள்ளன
இதனால் சாலையின் அகலம் சுருங்கி விட்டது. பற்றாக்குறைக்கு நீர்வரத்து ஓடை அருகே வேன், கார், ஆட்டோக்கள் நிறுத்தி வைத்து விடுகிறார்கள். மேலும் நடைபாதை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பும் இருக்கிறது, இதன் காரணமாக மெயின் ரோட்டில் மார்க்கெட் சாலை சந்திப்பு அருகே அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நெரிசல் காரணமாக மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தடுப்பு சுவர் கட்டும் பணியை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
