• June 14, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம்; தமிழ்நாடு முழுவதும் தொடக்கம்

 பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம்; தமிழ்நாடு முழுவதும் தொடக்கம்

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடக்கி வைத்தார்.

சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விநியோகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் இன்று தொடங்குகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வினியோகத்தை என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

“பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக கூட்டுறவு ஊழியர்களுக்கு மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பச்சரிசியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. தூய்மையான, வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.இரண்டு 500 ரூயாய் தாள்களை மட்டுமே வழங்க வேண்டும். பயனாளர்களை வேறு தேதிக்கு வாருங்கள் என சொல்லக்கூடாது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *