கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் பெண்களின் மார்கழி கோலங்கள்

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடத்தபட்டு வருகின்றன,
பஜனை குழுவினர் முக்கிய வீதிகள் வழியாக பஜனை பாடியபடி சென்று வருகிறார்கள். அதை தொடர்ந்து கட்டளைதாரர் சார்பில் பூஜைகள் தொடங்கி இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
கோவில் வாசலில் தினமும் பெண்கள் 3 பேர் பல்வேறு விதமான கோலங்களை போட்டு அசத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் கோலத்துக்கு பக்தர்கள் வரவேற்பு பெருகி வருகிறது.

சனிக்கிழமையன்று கடலை பருப்பு, கருப்பு உளுந்து, மக்காசோளம். திணை. சோளம், அரிசி, சிகப்பு அரிசி, பாசிப்பயறு. கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி வரைந்து கோலம் ரசிக்க வைத்தது.
தினமும் அதிகாலையில் பெண் பக்தர்கள் வேலுமணி, கோமதி,மற்றும் ஒருவர் என மூவர் சேர்ந்து சுமார் இரண்டு மணிநேரம் செலவழித்து கோலம் வரைந்து செல்கிறார்கள். அவர்களின் ஆன்மிக சேவை பாராட்டுக்குரியதாக இருக்கிறது.
