• June 15, 2025

மதுரையில் சட்டக் கல்வி மாநாடு 

 மதுரையில் சட்டக் கல்வி மாநாடு 

மதுரையில் இன்று விநாயகா மிஷன்ஸ் லா ஸ்கூல்  மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இணைந்து சட்டக் கல்வி மாநாடு நடைபெற்றது.

 சட்டக் கல்வியும், நடைமுறை வழக்கறிஞர் உலகமும் கைகோர்த்து புதிய வழிகளை உருவாக்கும் வரலாற்றுப் நிகழ்வாக இது அமைந்தது.

இந்த நிகழ்வில் மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் தலைவர் ஐசக் மோகன்லால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். 

“சட்டக் கல்வியும், நடைமுறை அனுபவமும், ஒன்றிணைய வேண்டும்” என்பதைக் கவனத்தில் கொண்டு , இளம் சட்ட மாணவர்களை நேர்மையான மற்றும் முழுமையான சட்ட வல்லுநர்களாக மாற்றுவதில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கினைப் பதிவு செய்தார்.

 விநாயகா மிஷன் லா ஸ்கூல் டீன் டாக்டர் அனந்த் பத்மநாபன்  பேசும் போது, டிஜிட்டல் யுகத்தில் நீதிக்கு அணுகும் புதிய பாதைகளை உருவாக்கும் தேவையை வலியுறுத்தினார். மாணவர்களின் நடைமுறை அனுபவத்திற்காக மாவட்டங்களிலுள்ள சட்ட மன்றங்களுடன் ஒத்துழைப்பு செய்வது மிகவும் முக்கியமானது என்பதை நினைவூட்டினார்.

இந்நிகழ்வில் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் சட்ட  உலகம்  சிவபிரகாஷ் law-school மற்றும் practitioner உலகம் இடையேயான இந்த இணைப்புக்கு ஆதரவளித்ததற்காக நன்றி கூறினார்.

85க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட கல்வியாளர்கள், மற்றும் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். இது நீதி, சமத்துவம் மற்றும் கல்வியை மையமாகக் கொண்ட ஒரு ஒத்துழைப்பு நிகழ்வாக அமைந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *