தமிழக சப் ஜூனியர் ஆக்கி அணியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றனர்

தூத்துக்குடி மாவட்ட அணிவீரர்கள். இவர்களில் 5 பேர் தமிழக அணியில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை தேசிய சப் ஜூனியர் ஆண்களுக்கான ஆக்கி போட்டி மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாடுகிறது. தமிழக அணிக்கான தேர்வு கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற மாநில சாம்பியன் போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம் 16-தேதி திங்கள் கிழமை முதல் திண்டுக்கல் ஜி .டி.என்.கல்லூரியில் நடைபெறஉள்ளது. 40 வீரர்கள் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட வீரர்கள் சரவணக்குமார், கபிலன், முகுந்தன் , ஜெகதீஸ்வரன், இஷாந்த் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட வீரர்களை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, முதுநிலை துணைத்தலைவர் நாகமுத்து மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன் ,ஜார்ஜ் ஈஸ்டர், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திரன், முருகன் , பயிற்சியாளர் வேல்முருகன், சுரேஷ்குமார் அஸ்வின், காளிதாஸ், ஆகியோர் பாராட்டி பயிற்சி முகாமுக்கு வழியனுப்பி வைத்தனர்

