• June 15, 2025

கோவில்பட்டியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 572 வழக்குகளுக்கு  தீர்வு 

 கோவில்பட்டியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 572 வழக்குகளுக்கு  தீர்வு 

கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில்,  மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள்ண ஆனந்த், மணிமேகலா, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் வழக்குகள் விசாரணை நடைபெற்றது.

நிலுவையில் இருந்த  மோட்டார் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வங்கி வராக்கடன் உள்ளிட்ட 1177 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், 572 வழக்குகளுக்கு  மூலம்572சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது. ரூ.1 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 103-க்கு  தீர்வு காணப்பட்டது. வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *