• June 16, 2025

22 அடி உயர பனைமரத்தில் ஏறி ‘கள் ‘ இறக்கிய சீமான்; கட்சியினர் ஆரவாரம்

 22 அடி உயர பனைமரத்தில் ஏறி ‘கள் ‘ இறக்கிய சீமான்; கட்சியினர் ஆரவாரம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பெரியதாழையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் இன்று கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் நடந்தது. 

இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், பனையேறும் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த போராட்டத்தில் பங்கேற்ற சீமான் பனைமரத்தில் ஏறி கள் இறக்கினார். சுமார் 22 அடி உயர பனையில் ஏறிய சீமான், பனைமரத்தில் சரசரவென ஏறி உச்சிக்கு சென்றார்.

பின்னர் பனைமரத்தில் இருந்து கள் இறக்கினார். 

 அப்போது நாம் தமிழர் கட்சியினர் கள் எங்கள் உரிமை.. கள் எங்கள் உணவு என்று கூறி முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்.

பனைமரத்தில் இருந்து கீழே இறங்கி வந்த சீமான், தான் இறக்கிய கள்ளை பனை ஓலை பட்டையில் தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்தார். ஆண், பெண் தொண்டர்கள் என பலரும் கள்ளினை வாங்கி அருந்தினர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *