• June 14, 2025

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து; பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் பரிதாப சாவு; மனைவி படுகாயம்

 கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து; பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் பரிதாப சாவு; மனைவி படுகாயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் ஜான். இவர் புதுப்பட்டி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜோன் எஸ்தர்.

கணவன்-மனைவி இருவரும் விருதுநகர் சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பினார்கள். காரை ராஜன் ஜான் ஒட்டி வந்தார். இன்று காலை அவர்கள் வந்த கார் கோவில்பட்டி அருகே தளவாய்புரம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த ராஜன் ஜான், இடிபாட்டில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்/ அவரது மனைவி ஜோன் எஸ்தர் பலத்த காயம் அடைந்தார்.

விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த ஜோன் எஸ்தரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பலியான ராஜன் ஜான் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்னொரு விபத்து

திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு பழங்கள் லோடு ஏற்றுவதற்காக என்பவர் லாரி ஓட்டிசென்றார். பழங்கள் வைப்பதற்கான பிளாஸ்டிக் டப்பாக்கள் லாரியில் இருந்தன.

அந்த லாரி எட்டயபுரம் தாண்டி கோடாங்கிபட்டி என்ற இடத்தில் சென்றபோது சாலையின் நடுவே தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரி பலத்த சேதம் அடைந்தது. நல்ல வேலையாக டிரைவர் உயிர் தப்பினார்.

இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் 2 ,மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கவிழ்ந்த லாரி , கிரேன் மூலம்  தூக்கி நிறுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *