• June 14, 2025

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி; `நான் தப்பியதை நம்பவே முடியவில்லை’ என்கிறார்  

 விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி; `நான் தப்பியதை நம்பவே முடியவில்லை’ என்கிறார்  

ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம், நேற்று மதியம் லண்டனுக்கு புறப்பட்டது.230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை சில நிமிடங்களில் தரை இறங்கியதுடன் ஒரு மாணவர் விடுதி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் சிக்கி 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் அதிசயமாக உயர் தப்பி இருக்கிறார். காயத்துடன் தப்பிய அவர், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. தனது அனுபத்தை பகிர்ந்து கொண்ட அவர் கூறியதாவது:-

விமானம் புறப்பட்ட பிறகு, 5-10 வினாடிகள், எல்லாம் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தோம்.. விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது.

எனது இருக்கை, 11-A, நான் அமர்ந்திருந்த பக்கம் விடுதிப் பக்கத்தில் இல்லை, அது விடுதியின் தரைத் தளம். மற்றவற்றைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் அமர்ந்திருந்த இடத்தில் அந்தப் பகுதி தரைத் தளத்தில் விழுந்தது, கொஞ்சம் இடம் இருந்தது. என் கதவு உடைந்தவுடன், கொஞ்சம் இடம் இருப்பதைக் கண்டேன், பின்னர் நான் வெளியே வர முயற்சித்தேன்,

அதன்பிறகு நான் கஷ்டப்பட்டு வெளியே வந்தேன். எதிர் பக்கத்தில் ஒரு கட்டிடச் சுவர் இருந்தது, விமானம் அந்தப் பக்கத்தில் முழுவதுமாக மோதியிருந்தது, அதனால் அந்தப் பக்கத்திலிருந்து யாரும் வெளியே வர முடியவில்லை. நான் இருந்த இடத்தில் மட்டுமே இடம் இருந்தது.

தீ விபத்து ஏற்பட்டபோது, என் இடது கையும் எரிந்தது. பின்னர் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எல்லாம் என் கண்முன்னே நடந்தது. நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன்

, நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருந்தேன். நான் என் சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்தேன். விமானத்தில் என்னைச் சுற்றிலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடல்கள் சிதறிக் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *