கோவில்பட்டியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி – நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
ரொக்கம் 1000 ரூபாய், 1கிலோ, பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் கணேஷ் பாபு, பாண்டியம்மாள், நாராயண குரு, ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் மற்ற நியாய விளைக்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
