கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக நிர்வாகத்தை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுவதாகவும், அரசின் பல்வேறு சேவைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் வரும் மக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு அலைய விடுவதாகவும் கூறப்படுகிறது.

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவும் லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், லஞ்சம் கேட்டு மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சண்முகநாதன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் மணிராஜ், மகளிரணி மாவட்ட செயலாளர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் மாநில துணைச் செயலாளர் முருகேசன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். மாவட்ட செயலாளர்கள் (களக்காடு)நெல்சன்,(தூடி மாநகர்)மாரிச்செல்வம்,(மதுரை)அழகர், தென்காசி மாவட்ட அமைப்பாளர் ரஞ்சித், நெல்லை மாவட்ட தலைவர் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







