இயக்குநர் பாக்யராஜின் கண்கள், மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..
சில ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருந்ததால் அவரது வீட்டுக்கு கண் மருத்துவமனை குழுவினர் இன்று சென்று கருவிழிகளை எடுத்து சென்றனர்
பாக்யராஜின் கருவிழிகளை கண் பார்வையற்றவர்களுக்கு பொருத்துவார்கள். அதன் மூலம் மறைந்தாலும் பாக்யராஜ் இந்த உலகை தன்னுடைய கண்களால் காண்பார் என்பது அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.
பாக்யராஜ் உடல் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இயக்குநர் பாக்கியராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.







