கோவில்பட்டியில் பூலித்தேவர் பிறந்தநாள் விழா
விடுதலை போராட்ட வீரர் மாவீரர் பூலித்தேவர் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக அன்னாரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்,

இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் அபிராமிமுருகன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் துரைராஜ், உலக திருக்குறள் கூட்டமைப்பு நிர்வாகி முத்துச்செல்வம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நலஇயக்கத் தலைவர் செல்லத்துரை என்ற செல்வம், மக்கள் நலம் அறக்கட்டளை நிர்வாகிகள் மாரிமுத்து குமார், ஜெகந்நாதன், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், தேமுதிக நிர்வாகி கொம்பையாபாண்டியன், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் பழனிச்சாமி, முருகன், ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.







