கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிக நிர்வாகவியல் துறையின் 2026 2027. கல்வியாண்டிற்கான மன்ற துவக்கவிழா மற்றும் இன்றைய சூழலில் மாணவர்களின் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. இறை வணக்கத்துடன் துவங்கிய இந்த நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் முனைவர் பா. மகேஷ் குமார் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். துறையின் தலைவர் சிவசங்கர் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். பயிற்சி பட்டறையில் துாத்துக்குடி காமராஜர் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். மேலும் சட்டசபையில் முதலமைச்சர் அமர்ந்திருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார். முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நிர்வாகிகள் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் புது ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறுவர் , சிறுமியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினரும் தொழில் அதிபருமான நடராஜன், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், நகர மன்ற உறுப்பினர் சண்முகவேல், கொல்லம் சேகர், தனபால், ஏழாயிரம்பண்ணை பாண்டி, நாகஜோதி […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு தினம் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கடைபிடிக்கப்பட்டது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் துணி மற்றும் சணல்,காகித பைகளை பயன்படுத்திட வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஜீலை 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 200க்கும் […]
சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் புதிய கிளை துவக்க விழா கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெரு ஸ்டாண்ட் பகுதியில் நடைபெற்றது. நிகழ்விற்கு கிளை தலைவர் சேவியர் தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கொடியினை ஆலோசகரும் நகர் மன்ற உறுப்பினருமான சீனிவாசன் திறந்து வைத்தார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வயணப்பெருமாள். மாவட்ட செயலாளர் செல்வராஜ், கிளைச் செயலாளர் வைரமுத்து, பொருளாளர் வெற்றிச்செல்வன், துணைத் தலைவர் அய்யாதுரை, […]
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த சித்திரகுப்தன் மகன் காளிமுத்து (வயது 40).விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், சின்னத்துரை(15), ஜெயராஜ்(5) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். காளிமுத்து தனது 2 மகன்களையும் தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு, ரெட்டியார்புரத்தில் உள்ள ஒரு தோட்டத்து வேலைக்காகச் சென்றுவிட்டு நேற்று மாலை 3 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார் .அவரது பின்னால் 3 பைக்குகள் மற்றும் ஒரு காரில் 9 பேர் பின்தொடர்ந்து வந்தனர். இதனை […]
தூத்துக்குடியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:- சிலர் நான் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மந்திரியாக ஆசைப்படுவதாக எழுதுகின்றனர். எனக்குக் கேபினட் அமைச்சர் பதவி தருவதாகச் சொன்னபோதே வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்தவன் நான். எந்த சுயநலத்திற்கும் நான் ஆசைப்பட்டதில்லை. என் கரங்கள் கரைபடியாதவை என்பதை இயற்கையே சொல்லும். என் மீது பழிதூற்றலாம், கோடி கோடியாகச் சேர்த்துவிட்டதாக நாக்கு கூசாமல் சொல்லலாம்; ஆனால், சாகும் வரை என் வாழ்வில் நேர்மையைக் காப்பேன். கடுமையான […]
தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன்.ஆறு உள்ளது, நீர் எங்கே? துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், கவர்னர் மாளிகையே களமிறங்கும்” என்று பேசியுள்ளார். அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆணையர், […]
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, கடந்த 29-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீசார், லஞ்ச ஊழல் தடுப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு […]
தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த நவீன் பாண்டியன் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், புதிய அலுவலராக நியமிக்கப்பட்ட பெ.சா. கருப்பணராஜவேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பெ.சா. கருப்பணராஜவேல் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது புதிய பொறுப்பினை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் அரசு நலத்திட்ட உதவிகள், மாவட்ட நிர்வாகத்தின் […]







