• June 4, 2025

Month: February 2024

செய்திகள்

பா.ஜ.க.வுடன் கூட்டணி:வாசன் எடுத்த முடிவை மூப்பனார் ஆன்மா மன்னிக்காது- காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி  இருப்பதாவது:- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.க. வுடன் கூட்டணி வைக்க யாரும் முன் வராத நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டு சேர்ந்திருக்கிறது. மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் 1996-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து […]

செய்திகள்

பா.ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி; ஜி.கே.வாசனுடன் அண்ணாமலை சந்திப்பு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசனை சந்தித்தார். அப்போது தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டது. 5 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்பி என்று பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிட உள்ளதாகவும், 3 தொகுதி என்றால் சைக்கிள் சின்னம், 5 தொகுதி என்றால் தாமரை சின்னம் தான் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஜே.சி.ஐ. நடத்திய வேலை வாய்ப்பு முகாம்

கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர். 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  நேரடியாக வந்து  பல்வேறு நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றனர். அவர்களில்  தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை பெற்றனர். முகாமில் ஜே.சி.ஐ.  மண்டலத்தலைவர் சிபி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் […]

செய்திகள்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பன்னீர்செல்வம், தினகரன்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயபுரத்தில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் தலைத்தூக்கியது. தற்போதைய திமுக ஆட்சியில் இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற நிலைதான் வியாபாரிகளுக்கும், வணிகர் சங்கங்களுக்கும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகளையும், மீனவர்களையும், ஊழியர்களையும் திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. […]

கோவில்பட்டி

கிறிஸ்தவர்கள் தவக்கால திருயாத்திரை நடைபயணம்

கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் 14-2-24 அன்று  சாம்பல் புதன் எனும் நிகழ்வுகளுடன் அனைத்து தேவாலயங்களிலும் தவக்காலம் அனுஷ்டிக்கப்பட்டது. இதே தவக்காலம் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்திலும் தவக்காலம் தொடங்கி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைபாதைகள் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று தவக்கால திருயாத்திரை நடைபயணமாக இறைமக்கள் புனித சூசையப்பர் திருத்தலத்திலிருந்து மாலை 5 மணிக்கு புதுரோடு,எட்டையபுரம் ரோடு,கதிரேசன் கோவில் ரோடு வழியாக ஜெபங்கள் செய்தவாறு வீரவாஞ்சிநகர் பரலோக அன்னை தேவாலயம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் பொது சுகாதார ஆய்வகம் கட்டும்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில்  புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, பொதுப்பணித் துறை நிா்வாகப் பொறியாளா் செல்வி, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (பொ) பொன்ரவி, மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி சுதா ஆகியோா் பணிகளை தொடங்கி வைத்தனா்.  நிகழ்ச்சியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.13 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை  பூவனநாதசுவாமி கோவிலில் உள்ள தெப்பக்குளம் அம்ரித் -2.0 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நகராட்சி மூலமாக சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி,, நகராட்சி ஆணையர் கமலா,, நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடேஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா,, சண்முகராஜா, ரவீந்திரன், நிருத்தியலட்சுமி, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, […]

கோவில்பட்டி

புனித ஓம் குளோபல் பள்ளியில் அறிவியல் விழா

கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் பிக் பேங் – மெகா அறிவியல் விழா நடந்தது.  பள்ளி தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார் . பள்ளி செயலாளர் உஷாராணி, இயக்குநர் சிவராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில், திரவ நைட்ரஜன் ராக்கெட், வாட்டர்மெலன் ப்லேஸ்ட், பெர்னோலி துப்பாக்கி, மைய விலக்கு பலகை, எலிவேன்ட் டூத்பேஸ்ட், திரவ நைட்ரஜன் ஸ்ப்லேஷ் மற்றும் ஏர் கனான் லான்ச்சர் போன்ற 50-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகள் […]

தூத்துக்குடி

கோவில்பட்டியில் ‘கடலைமிட்டாய் குறுங்குழுமம்’ அமைக்கப்படும்- தூத்துக்குடி நிகழ்ச்சியில் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு 

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசுகையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மழை, வெள்ள நிவாரண பணிகள், நிதி உதவிகள்,  அம்மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்தும் முதல்வர் […]

கோவில்பட்டி

புதியம்புத்தூர் அருகே மின்சார கார் உற்பத்தி ஆலை; கட்டுமானப்பணிகளை மு. க. ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் கிராமம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் 408 ஏக்கரில் ரூ.16 ஆயிரம் கோடி செலவில், வியட்நாம் நாட்டு நிறுவனத்தின் வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மின்சார கார் உற்பத்தி ஆலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா […]