• May 9, 2024

Month: February 2024

செய்திகள்

சென்னையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் பல்வேறு தரப்பினர் பரிந்துரைகள் வழங்கினர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களுடன் இன்று (27/02/2024) திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனை நடத்தினர். திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி, திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை […]

கோவில்பட்டி

வாக்குசாவடி திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில்  மத்திய ஒன்றிய திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கி பேசுகையில் திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை மக்களிடம் சொல்லி,வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார், கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட விவசாய அணி துணை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 100 பேருக்கு இலவச ஹெல்மெட் ; நடிகர் பிரசாந்த் வழங்கினார்

நடிகர் பிரசாந்த்  ரசிகர் மன்றம்  சார்பில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் கோவில்பட்டி  மெயின் ரோட்டில் உள்ள ஞானமலர் பெட்ரோல் பங்க்கில் நேற்று பொதுமக்கள் 100  பேருக்கு இலவசமாக நடிகர் பிரசாந்த் , ஹெல்மெட்டுகளை வழங்கினார்” நிகழச்சியில் பிரசாந்த் பேசுகையில், பொதுமக்கள் இரு சக்கர வாகனங்கள் .ஓட்டும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றம் சார்பில் ஹெல்மெட் இலவசமாக வழங்கி வருகிறோம் . சாலை விதிகளை […]

செய்திகள்

மேட்டுப்பாளையம் கலை  கல்லூரி கணித மன்றம் நிறைவு விழா

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24 கல்வி ஆண்டுக்கான கணித மன்றம் நிறைவு விழா இன்று( 26.2.2024) நடைபெற்றது. இவ்விழாவினில் கணிதத்துறை தலைவர் முனைவர் தி.பபிதா  அனைவரையும் வரவேற்று பேசினார்.  கல்லூரியின் முதல்வர் முனைவர் ஸ்ரீகானப்பிரியா  தலைமை உரை வழங்கினார்.இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை உதவி பேராசிரியர் முனைவர் எஸ் சந்தோஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு Ethics of Artificial Intelligence and Neural Network […]

கோவில்பட்டி

பள்ளி குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி

தமிழ்நாடு  சிறார் எழுத்தாளர்கள்  கலைஞர்கள் சங்கம் கோவில்பட்டி கிளையின் சார்பில் பள்ளிக் குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி  கி.ரா. மணிமண்டப வளாகத்தில் நடைபெற்றது. கிளைச் செயலர் பிரபு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிறுகதை  எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி  கலந்து கொண்டார். மேனாள் வேளாண்-அறிவியல்கல்வி தொழிற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவி மதுஸ்ரீ, மஞ்சுஸ்ரீ, மாணவர் கலைச்செல்வம், இலக்குமி  ஆலை துவக்கப்பள்ளி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் தெரிந்தவர்களை  பணியமர்த்த கோரி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில்  பயணச்சீட்டு கொடுக்கும் அறையில் தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கோவில்பட்டி ரெயில்  நிலையத்திற்கு வந்த மதுரை கோட்ட முதன்மை பொறியாளர் கார்த்திக்கை கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து மனு கொடுத்தனர்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, நாம் தமிழர் கட்சி ரவிகுமார், கூட்டமைப்பின் பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.,யு,.சி, ராஜசேகரன், வழக்கறிஞர் முத்துக்குமார் […]

செய்திகள்

பா.ஜ.க.வுடன் கூட்டணி:வாசன் எடுத்த முடிவை மூப்பனார் ஆன்மா மன்னிக்காது- காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி  இருப்பதாவது:- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.க. வுடன் கூட்டணி வைக்க யாரும் முன் வராத நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டு சேர்ந்திருக்கிறது. மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் 1996-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து […]

செய்திகள்

பா.ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி; ஜி.கே.வாசனுடன் அண்ணாமலை சந்திப்பு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசனை சந்தித்தார். அப்போது தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டது. 5 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்பி என்று பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிட உள்ளதாகவும், 3 தொகுதி என்றால் சைக்கிள் சின்னம், 5 தொகுதி என்றால் தாமரை சின்னம் தான் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஜே.சி.ஐ. நடத்திய வேலை வாய்ப்பு முகாம்

கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர். 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  நேரடியாக வந்து  பல்வேறு நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றனர். அவர்களில்  தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை பெற்றனர். முகாமில் ஜே.சி.ஐ.  மண்டலத்தலைவர் சிபி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் […]

செய்திகள்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பன்னீர்செல்வம், தினகரன்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயபுரத்தில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் தலைத்தூக்கியது. தற்போதைய திமுக ஆட்சியில் இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற நிலைதான் வியாபாரிகளுக்கும், வணிகர் சங்கங்களுக்கும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகளையும், மீனவர்களையும், ஊழியர்களையும் திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. […]