• June 6, 2025

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணி ; காணொளி காட்சி மூலம் மோடி தொடங்கி வைத்தார்

 கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணி ; காணொளி காட்சி மூலம் மோடி தொடங்கி  வைத்தார்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில்  புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, பொதுப்பணித் துறை நிா்வாகப் பொறியாளா் செல்வி, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (பொ) பொன்ரவி, மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி சுதா ஆகியோா் பணிகளை தொடங்கி வைத்தனா். 

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி நிா்வாகப் பொறியாளா் துரைசிங்கம், உதவி பொறியாளா் சந்திரசேகா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சத்யா, நகா்மன்ற உறுப்பினா் கவியரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *