• June 6, 2025

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.13 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.13 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை  பூவனநாதசுவாமி கோவிலில் உள்ள தெப்பக்குளம் அம்ரித் -2.0 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நகராட்சி மூலமாக சீரமைக்கப்பட உள்ளது.

இந்த பணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி,, நகராட்சி ஆணையர் கமலா,, நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடேஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா,, சண்முகராஜா, ரவீந்திரன், நிருத்தியலட்சுமி, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, நகர் மன்ற உறுப்பினர் விஜயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தெப்பக்குளத்தினை சுற்றி பேவர் பிளாக் சாலை, மின்விளக்கு வசதி மற்றும் மரங்கள், பூக்கள் வைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *