கிறிஸ்தவர்கள் தவக்கால திருயாத்திரை நடைபயணம்

கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் 14-2-24 அன்று சாம்பல் புதன் எனும் நிகழ்வுகளுடன் அனைத்து தேவாலயங்களிலும் தவக்காலம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதே தவக்காலம் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்திலும் தவக்காலம் தொடங்கி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைபாதைகள் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
நேற்று தவக்கால திருயாத்திரை நடைபயணமாக இறைமக்கள் புனித சூசையப்பர் திருத்தலத்திலிருந்து மாலை 5 மணிக்கு புதுரோடு,எட்டையபுரம் ரோடு,கதிரேசன் கோவில் ரோடு வழியாக ஜெபங்கள் செய்தவாறு வீரவாஞ்சிநகர் பரலோக அன்னை தேவாலயம் வந்து சேர்ந்தனர்.
அங்கு 6. மணிக்கு சிலுவை பாதைகளும்,இரவு 7 மணிக்குதிருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.இவையனைத்தையும் திருத்தலபங்கு தந்தை அருட்திரு சார்லஸ் அடிகளார்,உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து செய்தனர் இதில் அருட்சகோதரிகள்,இறைமக்கள் கலந்து கொண்டனர்.
