• May 20, 2024

கோவில்பட்டியில் ஜே.சி.ஐ. நடத்திய வேலை வாய்ப்பு முகாம்

 கோவில்பட்டியில் ஜே.சி.ஐ. நடத்திய   வேலை வாய்ப்பு முகாம்

கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர்.

500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  நேரடியாக வந்து  பல்வேறு நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றனர். அவர்களில்  தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை பெற்றனர்.

முகாமில் ஜே.சி.ஐ.  மண்டலத்தலைவர் சிபி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் விநாயகா ரமேஷ்,  ரோட்டரி சங்க  தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டனர், நிகழ்ச்சியில் ஜே.சி,ஐ, தீபன்ராஜ், கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழச்சியின் தொடக்கத்தில் கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார், முடிவில் இணைச்செயலாளர் அகிலேஷ் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *