• June 6, 2025

புதியம்புத்தூர் அருகே மின்சார கார் உற்பத்தி ஆலை; கட்டுமானப்பணிகளை மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 புதியம்புத்தூர் அருகே மின்சார கார் உற்பத்தி ஆலை; கட்டுமானப்பணிகளை மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் கிராமம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் 408 ஏக்கரில் ரூ.16 ஆயிரம் கோடி செலவில், வியட்நாம் நாட்டு நிறுவனத்தின் வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மின்சார கார் உற்பத்தி ஆலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம். பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி, வேளாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற வியட்னாம் புத்தமத துறவிகளை மு. க. ஸ்டாலின் சத்தித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *