திமுக கூட்டணியில் 2 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் 2 கட்சிகளுக்கு இன்று தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்திட்டனர்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு முடிவானது
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் நாமக்கல் தொகுதி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தான் திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கிய ராமநாதபுரம் தொகுதி இந்த முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.
.
