நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பணபட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் இந்த சோதனை இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்து வருகிறார். தூத்துக்குடி அமெரிக்கன் கல்லூரி அருகே வாகன சோதனை மேற்கொண்ட தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை பாலாஜி சரவணன் ஆய்வு செய்த காட்சியை மேலே பார்க்கிறீர்கள். இதே போல் மாவட்ட […]
தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் தேர்தலை எந்த வித தவறும் இல்லாமல் நேர்மையான முறையில் நடத்திட தேர்தல் அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு பணியாற்றிகொண்டுள்ளனர். நேற்று தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வாக்குசாவடி மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே.சண்முகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியாளர்களின் இரண்டாம் கட்ட மறுசீரமைப்பு கூட்டம், தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்றும் கீழ்க்கண்ட விபரப்படியான பணியாளர்களுக்கு, தொகுதி ஒதுக்கீடு மற்றும் அணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாக்குச் சாவடி தலைமை அலுவலர் -, வாக்குச் சாவடி அலுவலர் 1 – வாக்குச்சாவடி அலுவலர் 2 – வாக்குச்சாவடி அலுவலர் 3 -, […]
தற்காலிக, நிரந்தர உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட […]
தூத்துக்குடி தொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. 13-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடும் பணி 28.3.2024 அன்று தொடங்கப்பட்டு, 30.3.2024 அன்3று அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்காளர் பயன்படுத்தும் சீட்டு ஆனது 1.4.2024 அன்று முதல் தூத்துக்குடி பாராளுமன்றத் […]
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. இதில் அரசியல் கட்சியினரிடம் இருந்து கைநழுவி போன சின்னங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டனர். தற்போது அந்த சின்னம் கர்நாடகாவில் செயல்பட்டு வரும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டு […]
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கடலோர சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அந்தோணி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற காரின், நம்பர் பிளேட்டில் அரசு வாகனம் என்று எழுதப்பட்டு இருந்தது. காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். கார் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 டிராவல் பேக்குகளில் மொத்தம் 20 கிலோ 600 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது […]
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில்.. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 14,48,179 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 7,08,244 ஆண்கள் 7,39,720 பெண்கள் , 215 மூன்றாம் பாலினத்தோர் சேர்த்து மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர். மக்களவை தொகுதியில் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் விவரம் வருமாறு:- 1. விளாத்திகுளம் : ஆண்கள் 102845, பெண்கள் 106607 மூன்றாம் பாலினம் 20 என மொத்தம் 2,09,472 வாக்காளர்கள் […]
தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகரை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 42). சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (38). இவரது மனைவிக்கும் ஆண்டியப்பனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மகேஷ் தற்கொலை செய்து கொண்டாராம். இதனால் அவரது அண்ணன் குமாரசாமி (46) என்பவர் ஆண்டியப்பன் மீது ஆத்திரம் அடைந்தார். தம்பியின் மரணத்துக்கு காரணமான அவரை கொலை செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் திட்டம் […]
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 7வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 27ம் தேதி இரவு யாரோ மர்ம ஆசாமி ஏ.டி.எம் கதவை உடைத்து உள்ளே புகுந்து சிசிடிவி கேமராவை உடைத்துள்ளார்… பின்னர் பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்ற்த்துடன் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து நேற்று நெல்லையை சேர்ந்த வங்கியின் ஏடிஎம் சர்வீஸ் மேனேஜர் ஆசீர் நவீன் என்பவர் வந்து பார்த்தபோது ஏடிஎம். […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022