தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (6.5.2025) நடைபெற்றது. இந்த குற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் […]
தூத்துக்குடியை சேர்ந்த, நில உரிமையாளர் ஒருவருக்கு அவரது செல்போனில், தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மேற்சொன்ன நில உரிமையாளர் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தான் ஒரு தள பொறியாளர் என்றும் உங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெற்றுத் தருவதாக கூறியதோடு, மேலும் சில நபர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி செல்போன் டவர் அமைப்பதற்கு ஆவண கட்டணம், பொருட்கள் செலவு, […]
நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 31 மாவட்டங்கள் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் 480, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 360, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலரான எனது உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-1-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் அச்சுதராம், தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் 12-வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டினை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மாடு வதைசெய்து, மாட்டிறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் சில சம்பவங்கள் காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த சம்பவங்களில் போலீசார் மீது எந்தவித தவறும் இல்லை என்பதும், அந்த சம்பவங்களில் நடந்த உண்மைத் தன்மை குறித்து […]
தூத்துக்குடி தருவைக்குளம் கடல் பகுதியில் நேற்று காலை 11 மணி அளவில் கடலுக்குள் அமைக்கப்பட்ட மீன்பிடி தளத்தின் இரண்டாம் குறுக்கு பாதையில் கீழ் பகுதியில் ‘அன்னை’ விசைப்படகு ஊழியர்கள் உந்து விசை காத்தாடி பழுதுபார்த்தல் வகைக்கு கடலில் இறங்கி பணி செய்து கொண்டு இருந்தனர். தங்கள் காலில் வித்தியாசமான முறையில் தட்டுப்பட்டது என்னவென்று கூர்ந்து கவனித்ததில் அது சாமி சிலை என்பதை அறிந்து கவனமாக செயல்பட்டு பழு தூக்கி உதவியுடன் சேதாரம் இன்றி கரை சேர்த்தனர். இதுகுறித்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், இருசக்கர வாகனம் விற்பனை என்பன போன்ற போலி விளம்பரங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட 3 பேர் இதுகுறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் புகார் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை […]
தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 26 ஊர்க்காவல் படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையை பாராட்டி டெல்லி பொது இயக்குநரகம் – தீயணைப்பு சேவைகள், குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் படைத் தளபதி உலகம்மாள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். உள்துறை அமைச்சகம் மூலமாக […]
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து நடத்திய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 587 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
