திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த அகரம் பகுதியில் ஒரு கோவிலில் விழாவில் பக்தர்களுக்கு கோவில் சார்பில் நீர் மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் சிலர் பானகம் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இதனை கோவிலுக்கு வந்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாத்திரங்களிலும் வீடுகளுக்கு வாங்கிச் சென்று பிள்ளைகளுக்கு கொடுத்தனர். .பானகம் குடித்த சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். எனினும் மீண்டும் மீண்டும் அதே […]
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. 2014 ம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது, இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் […]
திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றியவர் திருநாவுக்கரசர். இந்த முறை அவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்துள்ள திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை மீண்டும் காணிக்கை ஆக்குகிறேன், கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது தொகுதி வளர்ச்சி […]
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ஆனந்த் வெங்கடேஷ் 2019ல் நியமிக்கப்பட்டார். 2020ல் நிரந்தர நீதிபதி ஆனார். அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு மறுஆய்வு வழக்கை தாமாக முன்வந்து எடுத்து நடத்தினார். இதனைத் தொடர்ந்து, இதனிடையே மறு ஆய்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை மாற்ற வேண்டும் என பொன்முடி உச்ச நீதிமன்றம் சென்றார். பின்னர் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டார். மீண்டும் சென்னை உயர் […]
தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1 ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வாடிக்கையாளர் சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, 1௦ அல்லது 11 ரம்ஜான், 19 நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இத்துடன் (ஏப்ரல் 7,14,21,28) 4 ஞாயிற்றுக்கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகள் ஏப்ரல் 13,27 விடுமுறையாகும். ஆக மொத்தம் இந்த மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வருகிறது,.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் பொதுவிடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல் தேர்தலுக்கு முந்தையநாளான ஏப்ரல் 18 மற்றும் தேர்தலுக்கு பிந்தைய நாளான ஏப்ரல் 20 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. இந்த உத்தரவை மீறி கள்ளசந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முத;ல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் பிரசார வியூகம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்த தடா பெரியசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு […]
சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 02/2024/CHZ பணி: Junior Executive (Architecture) – 3 பணி: Junior Executive (Engineering Civil) – 90 பணி: Junior Executive (Engineering Electrical) – 106 பணி: […]
மத்திய உள்துறை செயலாளர் எஸ்.சி.ஓக்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருடர்கள் பயன்படுத்தும் சமீபத்திய திருட்டு தொழில்நுட்பம். அவர்கள் வீடு வீடாக செல்கிறார்கள். = மத்திய உள்துறை அமைச்சகத்தின் முத்திரை மற்றும் லெட்டர்பேடு ஆகியவற்றை வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் போன்ற அடையாள அட்டைகளை வைத்திருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும். உங்கள் குடும்பம், குடும்பங்களை சேர்ந்த குழுக்களுக்கு செய்தியைப் பரப்புங்கள் .அவர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். […]
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022