தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது நெடுஞ்சாலை துறையில் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் சிங்கப்பூர் சென்று இருந்த எ.வ.வேலு, அங்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சென்னை ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் இடைக்கால தடை விதித்துள்ளதுடன், 15-ந்தேதி (அதாவது இன்று )லஞ்ச […]
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட தாலுகா நீதிமன்றங்களுக்குத் தற்காலிக அடிப்படையில் புதிய அரசு வழக்கறிஞர்களை (சட்ட அதிகாரிகள்) நியமித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ஆர்.சங்கர நாராயணன் , மகிளா நீதிமன்றச் சிறப்பு அரசு வழக்கறிஞராக எஸ்.ஆர்.மினிலா நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக எஸ்.மணிகண்ட பிரபு, மனித உரிமைகள் நீதிமன்றச் சிறப்பு அரசு வழக்கறிஞராக எம்.செந்தூரபாண்டி பொறுப்பேற்கவுள்ளனர். கோவில்பட்டி, திருச்செந்தூர், […]
கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்ற மாவட்டை துவக்கி வைத்து மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் பேசினார். மாவட்ட செயலாளர் புவிராஜ் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார். மாநாட்டில் ஜார்ஜ் நியூட்டன் வரவேற்புரை ஆற்றினார். கு.ராமசுப்பு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில தலைவர் ரவீந்திரன் உரை ஆற்றினார். மாவட்ட துணை செயலாளர் மணி எந்த சுப்பையா நன்றி கூறினார். மாவட்ட தலைவராக ஆர்.ராகவன், செயலாளராக […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிக நிர்வாகவியல் துறை மற்றும் சீருடை பணியாளர் பயிற்சி கழகம் சார்பாக சீருடை பணியாளர் தேர்வு மற்றும் இந்திய குடிமையியல் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்விற்கு கல்லூரியின் சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் மகேஷ் குமார் தலைமையேற்று பேசினார். துறையின் தலைவர் ச. சிவசங்கர் வாழ்த்தி பேசினார். கோவில்பட்டி ஜீனியஸ் ஜ ஏ எஸ் அகாடமி இயக்குநர் குரு. ச.சங்கர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து […]
கொவில்பட்ட்டி கோ.வேங்கடசாமி நாயுடு கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை சார்பாக “Web Development” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு 2 நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு மாணவி . மாரீஸ்வரி வரவேற்று பேசினார்.. தொடர்ந்து, இளங்கலை மூன்றாமாண்டு மாணவி ராஹினிஸ்ரீ சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாண்டியராணி தலைமை தாங்கி பேசினார். , கல்லூரி இயக்குநர் மகேஷ்குமார் வாழ்த்துரையாற்றி, மாணவர்கள் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் வகையில் இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் […]
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் தனது 79 வது வயதில் காலமானார் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம் ஆகும். கரிசல் மண் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை உள்ளிட்டவற்றை யதார்த்தமாக பதிவு செய்தவர். சென்னையில் இருந்து எழுத்தாளர் பூமணி உடல் கோவில்பட்டி கொண்டு வரப்பட்டு பாரதி நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் […]
தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ்நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (வயது 40), மாதாநகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு மாதாநகர்… பத்திரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில்… 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்தனர். சேகர் அவர்களை வழிமறித்து, குழந்தைகள் நடமாடும்… சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் எனக் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த […]
கோவில்பட்டியை அடுத்த அப்பனேரி பஞ்சாயத்து உட்பட்ட வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் நலசங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் ஐ இன்று ஜூலை 14 சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:- எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு முதலில் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பகுதியில் நாய்கள் தொந்தரவு மிகவும் அதிகமாக உள்ளது. சிறுவர் சிறுமிகள் வெளியே வருவதற்கே […]
கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று மந்தித்தோப்பு சாலை. இப்பகுதியில் குடியிருப்புகள் பெருகி வருகின மக்கள் தொகை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த சாலை குறுகலான, குண்டும் குழியுமான காட்சி அளிக்கிறது. இச்சாலை விரிவாக்கம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் சங்கம் சார்பாக, தமிழ்நாடு முதலமைச்சருக்கு 1000 அஞ்சல் அட்டை அனுப்புவது உட்பட கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என அறிவிப்பு செய்யப்பட்டது. […]
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை-தேவையான வசதிகள்; முதலமைச்சருக்கு த.மா.கா கடிதம்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், தேவையான வசதிகள் கோரியும் முதலமைச்சருக்கு தமிழ் மானில காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. கோவில்பட்டி கோட்ட தலைமை அஞ்சலகம் ,முன்பு இன்று ஜூலை 13 பகலில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் விக்னேஷ்ராஜா, வட்டார தலைவர்கள் கனிராஜ், முத்துப்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் முத்துசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் அய்யாதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் வைரம், […]







