நடிகர் ஜீவாவின் தந்தையான சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி வாகன விபத்தில் மரணம்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

நடிகர் ஜீவாவின் தந்தையான இவர், புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பது என தனி
பாணியை பின்பற்றி பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அவருடைய பூர்வீகம் ஆகும்.
சவுத்ரி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது.
ஆர்.பி. சவுத்ரி 1998 ஆம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.பி.சவுத்ரி ஆரம்பத்தில் இரண்டு திரைப்படம் மலையாளத்தில் தயாரித்தார்.

அதற்கு பிறகு 1990 ஆம் ஆண்டு ‘புதுவசந்தம்’ படத்தை தயாரித்து தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதுவசந்தம், புரியாத புதிர், நாட்டாமை, சூரியவம்சம் என பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.







