நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு: கோவில்பட்டியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் லெனின் குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், குருசாமி, ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







