• June 8, 2025

மருத்துவப்படி ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

 மருத்துவப்படி ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்க கிளை தலைவர் ஏ.அருமைராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கச் செயலாளர் எஸ்.தங்கவேலு பேசினார். பொருளாளர் முருகையா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* 8-வது ஊதியக்குழு உடனடியாக அமைக்க வேண்டும்.

*1.1.2020 முதல் 30.6.2021 வரை கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலை நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

*மத்திய அரசின் மருத்துவமனை வசதிகள் அனைத்து நகரங்களிலும் இல்லாத காரணத்தால் மருத்துவப்படி ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். *ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்.

*ரெயில்வே மருத்துவமனைகளில் ஓய்வூதியர்களுக்கு தேவையான மருத்தரைகளை இருப்பு வைக்க வேண்டும்.

*அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் “ஆரோக்கிய மையம்” அமைக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரெயில்வே சார்பில் கொடுக்கப்படும் இலவச பயண அட்டையை பயன்படுத்தும் காலவரையை 5 மாதத்தில் இருந்து 6 மாதமாக நீட்டிக்க வேண்டும். *ஓய்வூதியம் மறுசீரமைப்பு செய்யப்படும்போது, பணியில் உள்ள ஊழியர்களுக்கு “ஊதியக்குழுவால்” பரிந்துரைக்கப்படும் ஊதிய விகிதத்துக்கு இணையாக வழங்க வேண்டும்.

மேற்கண்டவை  உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *