• June 8, 2025

24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  ஆல்பர்ட் ஜான் நியமனம்

 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  ஆல்பர்ட் ஜான் நியமனம்

தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பதவிகளில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் பாலாஜி சரவணன்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக  திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  பணியாற்றி வந்த ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கார்த்திகேயன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.

பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டாக ஆதர்ஷ் பச்சேரா, திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டாக ஸ்ரேயா குப்தா, சேலம் போலீஸ் சூப்பிரண்டாக கவுதம் கோயல், நாகை போலீஸ் சூப்பிரண்டாக அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

,மேலும் கரூர் போலீஸ் சூப்பிரண்டாக பெரோஸ் கான், விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டாக கண்ணன், மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டாக ஸ்டாலின் நியமிக்கப்பட்டனர்.

கரூர் போலீஸ் சூப்பிரண்டாக  இருந்த பிரபாகர், திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். தருமபுரி போலீஸ் சூப்பிரண்டாக.யாக மகேஷ்வரன், தென்காசி போலீஸ் சூப்பிரண்டாக  ஶ்ரீநிவாசன் நியமனம் செய்யப்பட்டனர். சேலம் தெற்கு காவல் துணை ஆணையராக இருந்த மதிவாணன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 08) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more at: https://www.vilasalnews.com/news/thoothukudi/4750-albert-john-appointed-as-tuticorin-sp/

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *