கோவில்பட்டி ராஜீவ்நகர் ஈ.பி. காலனி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (வயது 45). இவர் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள காசி அம்மன் கோயில் அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், அனிதா எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் எடையுள்ள தங்கச் செயினை திடீரென பறித்துக் கொண்டு கண் […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சௌபாக்கியா மகாலில் நடந்தது. ரோட்டரி சங்க கடந்த ஆண்டு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட கிளப் சர்விஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2026-27ம் நிதியாண்டிற்கு தலைவராக முத்து முருகன், செயலாளராக ரமேஷ் குமார், பொருளாளராக சீனிவாசன் உட்பட புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பள்ளி […]
கோவில்பட்டி அருகே கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (55). இவர் நேற்று காலை சுமார் 9 மணியளவில் , வீட்டை பூட்டிவிட்டு எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றார்,. இரவில் அங்கு தங்கினார், பின்னர் , இன்று (ஜூலை 8) காலையில் சத்யா தனது வீட்டிற்குத் திரும்பினார்,. அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருநததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையிலிருந்த பீரோவின் கதவும் […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சுயநிதிப்பாடப்பிரிவுகளின் குறைதீர்க்கும் மன்றம் மற்றும் வணிக பகுப்பாய்வு துறையோடு இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கினை மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு நடத்தியது. கல்லூரி வணிக பகுப்பாய்வு துறைப் பேராசிரியர் கிருபாகரன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். இயக்குநர் மபா. மகேஷ்குமார் தலைமை உரையாற்றினார். கே. ஆர். கல்லூரியின் உயிர் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்புராயலு போதைப் பொருள் பற்றியும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். […]
சுப்ரிம் கோர்ட்டில் திமுக மனு தள்ளுபடி:முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டபடி கரூர் செல்கிறார்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக உள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட […]
கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடி பகுதியில் 22.6 செ.மீ., அளவுக்கு அதிகனமழை பெய்த நிலையில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேப்பாடி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுவரை மண்ணுக்குள் புதைந்த 6 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மேலும் சில தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக கூறப்படும்நிலையில், மீட்புப்பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியிலிருந்து […]
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான முத்தமிழ் மன்றம் தொடக்க விழா தமிழ்த்துறை சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி உறுப்பினர் அருண் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் ,விருதுநகர் மாவட்டம் என். சுப்பையாபுரம் […]
தூத்துக்குடி மாவட்டம், புதூர் அடுத்துள்ள காடல்குடி காவல் எல்லைக்குட்பட்ட வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கலாவதி (வயது 62). இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால், கண்ணனும், கலாவதியும் மட்டும் வடமலாபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தனர் நேற்று இரவு கலாவதி வீட்டின் உள்ளேயும், அவரது கணவர் கண்ணன் வீட்டின் வாசலிலும் படுத்து உறங்கினர். இன்று காலை 6 மணி […]
குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாகக் கூறி, சக காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி ரூ. 20 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர்… ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஷீலா மேரி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் . பணியாற்றினார். அப்போது, அவரது ஓட்டுநரான பிரபு […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதற்கிடையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மொத்தம் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதைபோல […]







