தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிப்பிக்கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பிற்கான கருத்துக்களை கூறினார். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதைதொடர்ந்து , கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு உள்பட 3 பேர் கொண்ட விசாரணை குழுவினர் இன்று நேரில் சென்று […]
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்திடவும் போதையில்லா தமிழகத்தை உருவாக்கிடவும் கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் ஒய். எம். சி. ஏ. சார்பாக பேரூந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை வகித்தார், ஒய். எம். சி. ஏ.தலைவர் ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ. […]
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் […]
நாடு முழுவதும் ஜூன் 26ம் தேதி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி பள்ளி முன்பிருந்து தொடங்கி நகரின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கொடியசைத்து துவக்கி […]
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை நேரில் சந்தித்து வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது :- ரெயில்வே நிர்வாகம் சார்பில் இயக்கப்பட உள்ள சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த வந்தே பாரத் ரெயிலுக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. பரபரப்பான நகரான கோவில்பட்டி கல்வி மற்றும் வர்த்தகத்தின் முக்கிய நகர மையமாக திகழ்கிறது. […]
ஜூன் 30-ம் தேதி சிறுகோள்கள் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோகிளப் சார்பில் திருச்செந்தூர் செந்தில் முருகன் நடுநிலைப் பள்ளியில் சிறு கோள்கள் தின டெலஸ்கோப் பயிற்சி நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு கோள்கள் பற்றியும்,தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை சுபா தலைமை தாங்கினார் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் முத்துச்சாமி,முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கோள்கள் குறித்த விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகளை வழங்கி, […]
தமிழக சட்டசபை கூட்டத்துடன் தொடங்கிய முதல் நாளிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் அப்பாவு, அவை காவலர்களை அழைத்துவெளியேற்ற உத்தரவிட்டார்.அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு தினசரி சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கள்ளச்சாராய சாவு அவையில் விவாதிக்க கோரி, தளபதி அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து வந்தனர். நேற்றைய சட்டசபை […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் வீற்றிருக்கும் அம்மா பூமாதேவி ஆலய குருபூஜை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, புண்ணியாக வசனம், சங்கல்ப,ம் மகா கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஹோமம், பூர்ணாதி நடத்தப்பட்டது. 7 மணிக்கு குரு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அம்பாள் பரிவார தெய்வங்களுக்கு 11 வகையான மஞ்சள், […]