சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

தமிழக சட்டசபை கூட்டத்துடன் தொடங்கிய முதல் நாளிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சபாநாயகர் அப்பாவு, அவை காவலர்களை அழைத்துவெளியேற்ற உத்தரவிட்டார்.அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள்
வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிறகு தினசரி சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கள்ளச்சாராய சாவு அவையில் விவாதிக்க கோரி, தளபதி அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து வந்தனர்.
நேற்றைய சட்டசபை கூட்டத்தின் போது ஏற்பட்ட அமளியை தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இன்று சட்டப்பேரவை தொடங்கியதுமே அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட னர்
அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்களை சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டார்.
அவைக் காவலர்கள் உள்ளே வந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றினார்கள். அதன் பிறகு பேசிய சபாநாயகர், அவையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வரும் அதிமுக உறுப்பினர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்கிறேன் என்று உத்தரவு பிறப்பித்தார்.
