மந்தித்தோப்பு அம்மா பூமாதேவி ஆலய குருபூஜை

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் வீற்றிருக்கும் அம்மா பூமாதேவி ஆலய குருபூஜை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, புண்ணியாக வசனம், சங்கல்ப,ம் மகா கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஹோமம், பூர்ணாதி நடத்தப்பட்டது.
7 மணிக்கு குரு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அம்பாள் பரிவார தெய்வங்களுக்கு 11 வகையான மஞ்சள், மாப் பொடி,திரவியம்,தேன், சந்தனம், விபூதி, குங்குமம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய குருக்கள் செல்வ சுப்பிரமணியன் சங்கரன் குருக்கள் ஆறுமுகம் ஆகியோர் பூஜைகளை செய்தார்கள் குருபாததரிசன பரிபாலன் அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது இதில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது
