போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட துண்டு பிரசுரம் விநியோகம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்திடவும் போதையில்லா தமிழகத்தை உருவாக்கிடவும் கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் ஒய். எம். சி. ஏ. சார்பாக பேரூந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை வகித்தார், ஒய். எம். சி. ஏ.தலைவர் ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ. ஏ. டி. யு. சி.ராஜசேகரன், மகேந்திரன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், ஜெய்கிரிஷ் அறக்கட்டளை ஜெய்ஸ்ரீ கிருஸ்டோபர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாடசாமி,அழகுதுரை, தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், வழக்கறிஞர் முத்துக்குமார், ஜெய்பீம் தாவிது, தோணுகால் மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
