கோவில்பட்டியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

நாடு முழுவதும் ஜூன் 26ம் தேதி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி இன்று கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி பள்ளி முன்பிருந்து தொடங்கி நகரின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
