திருச்செந்தூரில் சிறுகோள் கள் தின டெலஸ்கோப் பயிற்சி

ஜூன் 30-ம் தேதி சிறுகோள்கள் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோகிளப் சார்பில் திருச்செந்தூர் செந்தில் முருகன் நடுநிலைப் பள்ளியில் சிறு கோள்கள் தின டெலஸ்கோப் பயிற்சி நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு கோள்கள் பற்றியும்,தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியை சுபா தலைமை தாங்கினார் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் முத்துச்சாமி,முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கோள்கள் குறித்த விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகளை வழங்கி, தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர்.
பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
