• May 20, 2024

Month: April 2023

பொது தகவல்கள்

நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் எப்படி செய்யலாம்?

புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் எப்படி செய்யலாம் என்பது பற்றிய செய்முறை விளக்கம்  தேவையான மூலப்பொருட்கள் 1. சித்தரத்தை – 50 கிராம். 2. தாளிசபத்திரி – 50 கிராம் 3. அதிமதுரம் – 25 கிராம்4. சுக்கு – 50 கிராம்5. சாதிக்கோஷ்டம் – 25 கிராம்6. ஆடாதோடை – 10 கிராம்  மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்  தனி […]

கோவில்பட்டி

நல்லகண்ணு மருமகன் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கட்சியினர் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும் நல்லக்கண்ணுவின் மருமகனுமான எஸ்.அழகுமுத்து பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அழகுமுதுபாண்டியன் உருவபடத்துக்கு நகர செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,  ஏ.ஐ.டி.யு.சி.மாநில தலைவர் காசி விஸ்வநாதன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் கண்ணம்மா,ராமக்கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி பஞ்சாலை தொழிற்சங்க தலைவர்கள் பரமறாஜ்ம் குருசாமி, ரன்முகவேல், மாதர் சம்மேளனம் விஜயலட்சுமி ஆகியோர் […]

தூத்துக்குடி

திருநெல்வேலி எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்; தூத்துக்குடி எஸ்.பி.க்கு கூடுதல் பொறுப்பு

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:- , தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு, திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக இருந்துவரும் சரவணன் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்படுகிறார் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளரான பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார் . மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். புது உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று 4ம்தேதி கோவில்பட்டி சத்தியபாமா […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பள்ளிக்கு மெர்கன்டைல் வங்கி  ரூ.5 லட்சம் நன்கொடை

கோவில்பட்டி, வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை  சங்கத்திற்கு சொந்தமான ஈ. வே. அ.  வள்ளிமுத்து தொடக்க  பள்ளியின் புதிய கட்டிட நிதிக்காக ரூ. 5 லட்சம் நன்கொடையாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பாக கோவில்பட்டி கிளை மேலாளர் சுரேஷ் ஜெசுபாதம் வழங்கினார். அதனை பள்ளி செயலர்  ஆர்.வி.எஸ். வேல் முருகேசன் பெற்றுக் கொண்டார். அப்பொழுது நாடார் மகாஜன சங்க துணைத் தலைவர் வி.என்.பி,.ஆர்,ஏ.பிரபாகரன், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் துரை , முன்னாள் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ,துணைத் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பங்குனி திருவிழா பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 15 ந்தேதி (சனிக்கிழமை) தெப்பத் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் அவரது அலுலகத்தில் நடந்தது. கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், தாசில்தார் சுசிலா, நகரசபை ஆணையாளர் ராஜாராம், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ்குமார், […]

கோவில்பட்டி

நிழற்குடை அமைக்கும் பணி: சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தனர்

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.50 லட்சம் மதிப்பீட்டில்  பயணிகள் நிழற்குடை அமைக்கும் பனி மேற்கொள்ளப்படுகிறது.  இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்தனர்.. இந்நிகழ்வில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன், உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் .ரத்தினவேல், மணியாச்சி […]

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது என்றும் எங்கள் தரப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் எனவும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இறுதியில் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 20-ம் தேதி […]

தூத்துக்குடி

கோடைகாலம் ஆரம்பம்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்- தூத்துக்குடி மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வல்லநாடு நீரேற்று  நிலையத்தை பார்வையிட்டேன். நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஆற்றில் வரும் நீர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்கானிக்குமாறும், நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி உள்ள அமலைச் செடிகள் மற்றும் கிணற்றுக்குள் நீர் வருவதற்கு  தடையாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் மேலும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு

கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா கொண்டாடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஆர்த்தி மகாலில் நேற்று காலை  நடைபெற்றது. கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் தலைமை தாங்கினார். செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் பட்டுராஜன், ஜெனறேசம் இணை செயல்லாளர்கள் லெட்சுமணன், செந்தில்குமார், துணை செயலாளர்கள் மாரிசாமி, அய்யலுசாமி, சட்ட ஆலோசகர்கள் பால்ராஜ், ரெங்கநாயகலு ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ.,மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, […]