• May 20, 2024

கோவில்பட்டியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்

 கோவில்பட்டியில் கிறிஸ்தவர்கள்  குருத்தோலை ஊர்வலம்

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலம்,தென்னிந்தியதிருச்சபை(C.S.I)யினர் இணைந்து குருத்தோலை ஊர்வலம் நடத்தினர்.புனித சூசையப்பர் திருத்தல இறைமக்கள் இன்று ஞாயிறு காலை 6மணிக்கு திருத்தலம் வந்தனர் அங்கு அவர்களுக்கு குருத்தோலை வழங்கப்பட்டது .

திருத்தலத்தில் பங்குதந்தை அருட்திரு அலோசியஸ் துரைராஜ்,உதவி பங்கு தந்தை மகேஷ்ஆகியோர் இணைந்து வழிபாடு நடத்தினர் அங்கிருந்து இறைமக்கள் அருட்தந்தையர்கள் தலைமையில் கையில் குருத்தோலை ஏந்திய வண்ணம் தென்னிந்திய திருச்சபை சென்றனர்.

அங்கு சேகரதலைவர் அருட்திரு சாமுவேல் தாமஸ் ,உதவி குரு ஜெபஸ்ரஞ்சித், கவுரவகுரு இமானுவேல் இணைந்து இறைசெய்திகளை வழங்கினர்.

பின்னர் இரு திருச்சபை இறைமக்களும் சேர்ந்து கையில் குருத்தோலை ஏந்திய வண்ணம் அருட்தந்தையர்கள் தலைமையில் ஓசன்னா பாட்டு பாடி ஜெபம்செய்தவாறு ஊர்வலம் சென்றனர்.

புதுரோடு, கடலையூர்ரோடு,

மில்தெரு, சாத்தூர்ரோடு வழியாக புனித சூசையப்பர் திருத்தலம் வந்து சேர்ந்தனர்.அங்கிருந்து C S I ஆலய இறைமக்கள் C.S.I. ஆலயம் சென்றனர்.பின் புனித சூசையப்பர் திருத்தலத்தில் திருப்பலி நடைபெற்றது.

திருப்பலி முடிந்த உடன் சாலக்குடி டிவைன் சென்டர் அருட்சகோதரர் ராஜேந்திரன் தியானம் நடத்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *