தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் சைக்கிளில் ரோந்து சென்றார்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்.
ரோந்து பணியின் பொது ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று காவல்துறையினர் சரியாக பணி செய்கிறார்களா என்பது குறித்தும், சமூக விரோதிகளின் நடமாட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று எஸ்..பி..பாலாஜி சரவணன் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு சாதாரண உடையணிந்து சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக கையில் மண்வெட்டி கணையுடன் திரிந்தவரை பிடித்து விசாரணை செய்தார்.
பின் அவரை தென்பாகம் காவல் நிலையத்திற்கு அனுப்பி, அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
அவ்வாறு ரோந்து சென்றவர் திடீரென தென்பாகம் காவல் நிலையத்திற்கு சென்று ஆவணங்களையும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டார். மேலும் காவல் நிலையம் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளனவா எனவும் பார்வையிட்டு அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.